எரிபொருள் விலையை குறைக்க முடியாது என அறிவிப்பு

எரிபொருள் விலையை குறைக்க முடியாது: போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

by Staff Writer 12-03-2020 | 3:41 PM
Colombo (News 1st) உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை சடுதியாக குறைவடைந்துள்ள போதிலும், நாட்டில் எரிபொருள் விலையை குறைக்க முடியாது என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தினார். எரிபொருள் விலைத்திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். எனவே, எரிபொருள் விலை குறைப்பின் நன்மைகளை பொதுமக்களுக்கு நேரடியாக பெற்றுக்கொடுக்கக்கூடிய விதம் குறித்து ஆராயப்படுவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார். அண்மையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்ட போதும், பஸ் கட்டணம், பாடசாலை போக்குவரத்து கட்டணம் ஆகியன குறைவடையவில்லை என அவர் கூறியுனார். இதன் காரணமாக நாட்டில் எரிபொருளுக்கான நிலையான விலையை அறிவிப்பது தொடர்பில் தற்போது ஆராயப்படுவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.

ஏனைய செய்திகள்