இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு தடை விதித்தது சவுதி அரேபியா

by Staff Writer 12-03-2020 | 9:58 AM
Colombo (News 1st) கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு சவூதி அரேபியா சுற்றுலாத் தடை விதித்துள்ளது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பிலிபைன்ஸ், சூடான், சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட நாடுகளுக்கே சவுதி அரேபியா தடை விதித்துள்ளது. இந்த நாடுகளுக்கான விமான சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமது நாட்டிற்கு பிரவேசிப்பதற்கும் சவுதி அரேபியா தடை விதித்துள்ளது. எவ்வாறாயினும் இந்தியா மற்றும் பிலிபைன்ஸை சேர்ந்த சுகாதாரப் பிரிவினருக்கு இந்தத் தடை அமுலாகாது என சவுதி அரேபியா அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் இதுவரை கொரானா தொற்றுக்குள்ளான 45 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.