English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
12 Mar, 2020 | 3:51 pm
Colombo (News 1st) எதிர்வரும் பொதுத்தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் இணைந்து பொதுச்சின்னத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று (11) இரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான குழுவிற்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
புத்தளத்தில் நீண்டகாலமாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமை தொடர்பில், அங்குள்ள பள்ளிவாசல் சம்மேளனம், பொதுநல அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தியிருந்தன.
இந்நிலையிலேயே இது தொடர்பில் இரண்டு கட்சித் தலைவர்களுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, புத்தளம் மாவட்டத்தில் பொது சின்னத்தில் போட்டியிடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்களின் ஒதுக்கீடு தொடர்பில் இரு தரப்பும் கலத்துரையாடி முடிவெடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
05 May, 2022 | 01:59 PM
10 Feb, 2022 | 11:38 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS