5 மாணவர்கள் மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பு

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பு

by Staff Writer 11-03-2020 | 4:51 PM
Colombo (News 1st) ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் காயமடைந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காகவே இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மாணவர் மீது டயரை வீழ்த்தி காயப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மாணவரும் குறித்த ஐவரில் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் டயரொன்று தம் மீது வீழ்ந்ததால் காயமடைந்ததாகத் தெரிவித்த மாணவர் ஒருவர் தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.