தேங்காய்களை குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை

தேங்காய்களை குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை

by Staff Writer 11-03-2020 | 6:52 AM
Colombo (News 1st) தேங்காய்களை சலுகை விலையில் பெற்றுக்கொடுக்கும் திட்டத்தை தெங்கு அபிவிருத்தி சபை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய முதல் கட்டத்தின் கீழ் 3 இடங்களில் குறைந்த விலையில் தேங்காய்களை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பத்தரமுல்லை தெங்கு அபிவிருத்தி சபை, நுகேகொடை சந்தை மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர பஸ்நிலையச் சந்தை ஆகிய இடங்களில் சலுகை விலையில் தேங்காய்களை விற்பனை செய்ய தெங்கு அபிவிருத்தி சபை நடவடிக்கை எடுத்துள்ளது.