ஐக்கிய மக்கள் சக்தி தொலைபேசி சின்னத்தில் போட்டி

ஐக்கிய மக்கள் சக்தி தொலைபேசி சின்னத்தில் போட்டி

by Staff Writer 11-03-2020 | 7:43 PM
Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாசவின் தலைமையில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இன்று மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். தொலைபேசி சின்னத்தில் வெற்றியீட்டி ஏப்ரல் 26 ஆம் திகதி புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக அவர் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.