இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலிருந்து 600 பேர் நாட்டுக்கு வருகை

by Staff Writer 11-03-2020 | 1:22 PM
Colombo (News 1st) விமானங்களின் ஊடாக இன்று (11) நாட்டை வந்தடைந்த சுமார் 600 பயணிகள் Batticaloa Campus மற்றும் கந்தக்காடு கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இன்று காலை நாட்டை வந்தடைந்தோரில் 450 பேர், 17 பஸ்களில் Batticaloa Campus மற்றும் கந்தக்காடு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஏனைய 150 பேரை குறித்த கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இத்தாலி, ஈரான், தென் கொரியா, துபாய், கத்தார், மலேஷியா, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.