ஏப்ரல்21 தாக்குதல் தொடர்பில் கைதான இருவருக்கு பிணை

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைதான மேலும் இருவருக்கு பிணை

by Staff Writer 10-03-2020 | 3:28 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஏனைய 59 பேர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு நீதவான் A.C. ரிஸ்வான் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியாவில் ஆயுதப்பயிற்சி பெற்றமை மற்றும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புபட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்களில் ஐவருக்கு இதுவரை பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.