by Staff Writer 10-03-2020 | 1:15 PM
Colombo (News 1st) கொழும்பு பங்குச்சந்தையில் இடைநிறுத்தப்பட்டிருந்த கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இன்று காலை கொடுக்கல் வாங்கல் ஆரம்பிக்கப்பட்டபோது, பிரதான விலைச்சுட்டெண் வீழ்ச்சியடைந்திருந்தது.
S&P SL 20 சுட்ணெ் 5 வீதத்தால் வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன.
பங்குச்சந்தையின் மொத்த சுட்டெண் 2.7 வீதத்தால் குறைவடைந்துள்ளது.