தீக்காயங்களுடன் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

முன்னேஸ்வரத்தில் தீக்காயங்களுடன் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

by Staff Writer 09-03-2020 | 4:50 PM
Colombo (News 1st) சிலாபம் - முன்னேஸ்வரம் பகுதியில் தீக்காயங்களுடன் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிடைத்த தகவலுக்கமைய இன்று (09) காலை சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 78 வயதான பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.