சுற்றுலாத்துறையில் முதலீடுகளை உள்ளீர்க்க திட்டம்

சுற்றுலாத்துறையில் முதலீடுகளை உள்ளீர்க்க திட்டம்

by Staff Writer 09-03-2020 | 3:06 PM
Colombo (News 1st) சுற்றுலாத்துறையில் பாரிய முதலீடுகளை உள்ளீர்ப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதற்கமைய, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளை இந்த ஆண்டுக்குள் ஈர்ப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறையில் இந்த ஆண்டின் இறுதிக்குள் 30 இற்கும் அதிகமான முதலீடுகள் உள்ளீர்க்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சுமார் 122 மில்லியன் அமெரிக்க டொலர் வரை நேரடி முதலீடுகளை எதிர்பார்க்கப்படுகிறது.