இங்கிலாந்துடனான டெஸ்ட்: இலங்கைக் குழாம் பெயரிடல்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கைக் குழாம் பெயரிடல்

by Staff Writer 09-03-2020 | 7:05 PM
Colombo (News 1st) இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கைக் குழாம் பெயரிடப்பட்டுள்ளது. திமுத் கருணாரத்ன தலைமையிலான குழாத்தில் 16 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். நட்சத்திர துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேராவிற்கு அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஆகஷ்ட் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் பின்னர் குசல் ஜனித் பெரேரா இலங்கை டெஸ்ட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார். அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில் முன்னாள் அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ், குசல் மென்டிஸ், தினேஸ் சந்திமால், தனஞ்சய டி சில்வா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 19ஆம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. அதற்கு முன்னதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவர் அணியும் இங்கிலாந்தும் 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் மோதவுள்ளன. கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் அந்தப் பயிற்சி போட்டி நடைபெறவுள்ளது.