வடக்கின் பெருஞ்சமர்: சென். ஜோன்ஸ் அணி அபார வெற்றி

by Staff Writer 07-03-2020 | 10:00 PM
Colombo (News 1st) 114 ஆவது வடக்கின் பெருஞ்சமர் வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியில் சென். ஜோன்ஸ் அணி இன்னிங்ஸ் மற்றும் 16 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. போட்டியில் முதல் இன்னிங்ஸில் யாழ். மத்திய கல்லூரி அணி 150 ஓட்டங்களையும்  சென்.ஜோன்ஸ் அணி 291 ஓட்டங்களையும் பெற்றன. 141 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ். மத்திய கல்லூரி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 53 ஓட்டங்களுடன் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது. அதற்கமைய, இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க யாழ். மத்திய கல்லூரி அணிக்கு மேலும் 88 ஓட்டங்கள் தேவைப்பட்டன. எனினும், யாழ். மத்திய கல்லூரி அணி வீரர்களால் இன்று மேலும் 36 ஓட்டங்களையே பெற முடிந்தது. சென். ஜோன்ஸ் சுழற்பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சில் எஞ்சிய 7 விக்கெட்களும் வீழ்த்தப்பட்டன. யாழ். மத்திய கல்லூரி அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் 124 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது. பந்துவீச்சில் ஏ.சரண் 32 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் வை. விதுஷன் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். சென். ஜோன்ஸ் அணி 2017 ஆம் ஆண்டிற்கு பின்னர் வடக்கின் பெருஞ்சமரை வெற்றிகொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.