கொரோனா:மட்டக்களப்பு, வவுனியாவில் மத்திய நிலையங்கள்

கொரோனோ தொற்றுள்ள நாடுகளில் இருந்து வருவோரை மட்டக்களப்பு, வவுனியாவில் தனிமைப்படுத்தி வைக்க திட்டம்

by Staff Writer 07-03-2020 | 6:18 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்காக இரண்டு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. Batticaloa Campus மற்றும் வவுனியா கந்தப்பாடு புனர்வாழ்வளிப்பு நிலையம் என்பன மத்திய நிலையங்களாக அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். நாட்டிற்கு வருகை தருவோரை கண்காணிக்கும் நடவடிக்கை நாளை மறுதினம் முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.