கொரோனாவால் இத்தாலியில் உயிரிழப்பு அதிகரிப்பு

கொரோனாவால் இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 197 ஆக அதிகரிப்பு

by Bella Dalima 07-03-2020 | 3:28 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸினால் இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 24 மணித்தியாலங்களுக்குள் 49 பேர் தொற்றினால் உயிரிழந்ததாக இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இத்தாலியில் மொத்தமாக 4,600 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் சீனாவிற்கு வௌியே அதிகூடிய இறப்புக்கள் பதிவாகிய நாடாக இத்தாலி பதிவாகியுள்ளது. இந்நிலையில், உலகளாவிய ரீதியில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. அத்துடன், மூவாயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இதனால், கொரோனா தொற்று பரவுதல் தொடர்பில் ஆழமாக ஆராயுமாறும் அதனைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்து நாடுகளும் அவற்றின் உயர்ந்த கரிசனையைச் செலுத்த வேண்டுமெனவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் Tedros Adhanom Ghebreyesus வலியுறுத்தியுள்ளார்.