மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் இராஜினாமா

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் இராஜினாமா

by Staff Writer 07-03-2020 | 6:09 PM
Colombo (News 1st) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தினை கடந்த வாரத்தில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்ததாக அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார். இன்றிலிருந்து அமுலாகும் வகையில் இராஜினாமா கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.