தேங்காய் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை 

தேங்காய் விலையைக் கட்டுப்படுத்தும் பொறிமுறையொன்றை செயற்படுத்துமாறு பிரதமர் பணிப்புரை

by Staff Writer 06-03-2020 | 4:37 PM
Colombo (News 1st) சடுதியாக அதிகரிக்கும் தேங்காய்களின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறையொன்றை செயற்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குருணாகல் பெருந்தோட்ட நிறுவனம், சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம், தெங்கு பயிர்செய்கை சபை மற்றும் சதொச ஊடாக நுகர்வோருக்கு சலுகை விலையில் தேங்காய்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மஞ்சள் மற்றும் உழுந்து என்பவற்றின் இறக்குமதிகளை மட்டுப்படுத்துமாறும் வாழ்க்கைச் செலவு குழு கூட்டத்தில் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.