தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் 

தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம்

by Staff Writer 06-03-2020 | 4:12 PM
Colombo (News 1st) பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும். மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டார். எவ்வித காரணங்களுக்காகவும் தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால எல்லை நீடிக்கப்படமாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, எதிர்வரும் 19 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் கட்டுப்பணம் செலுத்துவதற்கான அவகாசம் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது. பொதுத்தேர்தலில் வேட்பாளர் ஒருவர் செலுத்த வேண்டிய கட்டுப்பணம் 2000 ரூபாவாகும். இதுவரை 4 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. வன்னி மற்றும் யாழ். தேர்தல் மாவட்டங்களிலேயே கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.