by Staff Writer 06-03-2020 | 3:38 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 10 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இவர்களில் மூவர் அங்கொடை தேசிய தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் பிரிவின் சிரேஷ்ட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டார்.
மேலும், 7 பேர் பதுளை உள்ளிட்ட வைத்தியசாலைகள் பலவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் தென் கொரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சிரேஷ்ட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர மேலும் தெரிவித்தார்.