ஆணைக்குழு அதிகாரிக்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பது சட்டத்திற்கு புறம்பானது: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை

by Staff Writer 06-03-2020 | 6:27 PM
Colombo (News 1st) அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் பேர்ள். கே. வீரசிங்கவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் சற்று முன்னர் பிடியாணை பிறப்பித்திருந்தது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. ஆணைக்குழு அதிகாரி ஒருவரை சாட்சியாளராக அழைப்பதோ அல்லது அவருக்கு எதிராக அறிவித்தல் பிறப்பிப்பதோ சட்டத்திற்கு புறம்பானது என ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள், அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை ஜனாதிபதிக்கு மாத்திரம் தெரியப்படுத்துவதற்கான அதிகாரம் காணப்படும் நிலையில், ஆணைக்குழுவின் செயலாளருக்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பது சட்டத்திற்கு புறம்பானதாக அமைந்துள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.