பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் கவனம்

அத்தியாவசிய பொருட்களின் விலையைக் குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம்

by Staff Writer 06-03-2020 | 4:22 PM
Colombo (News 1st) அத்தியாவசிய பொருட்களின் விலையைக் குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் கூடிய வாழ்க்கைச் செலவுக் குழுவில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிப்போருக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சரவை இணைப்பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தியாளர்களின் அறுவடைகளை கொழும்பு உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு எடுத்துச்செல்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.