இரண்டு சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தல்

பொதுத்தேர்தல்: யாழ் மற்றும் வன்னி மாவட்டங்களிலிருந்து இரண்டு சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன

by Staff Writer 05-03-2020 | 7:20 PM
Colombo (News 1st) பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களில் இரண்டு சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக முதலாவது சுயேட்சைக்குழு கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. இதேவேளை, யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக மற்றுமொரு சுயோட்சைக்குழு கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால எல்லை நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டதுடன், இம்மாதம் 18 ஆம் திகதி நண்பகல் வரை அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.