பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏப்ரல் 10 ஆம் திகதி 1000 ரூபா சம்பளம் வழங்கப்படும்: ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 05-03-2020 | 7:46 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்கும் செயற்பாடு ஏப்ரல் 10 ஆம் திகதி அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில், ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை இன்று சந்தித்த போதே ஜனாதிபதி இந்த விடயத்தை கூறியுள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு பயிற்சி வழங்குவதற்கான அனுமதியை வழங்குமாறு, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை, தான் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் என்பதால், பொதுத்தேர்தலில் கட்சியின் வெற்றிக்காக அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.