மட்டக்களப்பில் 11,889 ஏக்கரில் நெற்செய்கை

உறுகாமம் பெரிய நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் 11,889 ஏக்கரில் நெற்செய்கை

by Staff Writer 05-03-2020 | 4:37 PM
Colombo (News 1st) உறுகாமம் பெரிய நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் இவ்வாண்டு சிறுபோகம் மேற்கொள்ளக்கூடிய செய்கை நிலப்பரப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்ப்பாசனத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் 11,889 ஏக்கரில் நெற்செய்கையும் 115 ஏக்கரில் மேட்டு நிலப்பயிர்களையும் மேற்கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில், விவசாயத்துறை அதிகாரிகளின் பரிந்துரையுடன் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.