English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
05 Mar, 2020 | 5:19 pm
Colombo (News 1st) தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி நாட்டின் தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் இந்தியாவிலிருந்து ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்தும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்காத தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதற்கு பிறகும் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு இருக்குமாயின் அது தமிழ் மக்களின் சாபக்கேடு என வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் தமது பிரச்சினைகளைத் தாமே போராடி, தாமே தீர்த்துக்கொள்ள வேண்டுமாகவிருந்தால் மக்கள் பிரதிநிதிகள் எதற்காக எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
1972 ஆம் ஆண்டு முப்பெரும் தலைவர்களான தந்தை செல்வா, ஜி.ஜி. பொன்னம்பலம், சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோரால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கே தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தார்மீகக் கடமையும் பொறுப்பும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, எதிர்வரும் பொதுத்தேர்தலில் அனைத்து அமைப்பினரும் ஓரணியாக இணைந்து ஒரு மாற்றத்தைக் காண்பது காலத்தின் தேவை எனவும் அதற்காக அணி திரள வேண்டியது அவசியம் எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Jun, 2022 | 07:33 PM
03 Mar, 2022 | 05:07 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS