V-Force: இரண்டாவது நாளாக முன்பள்ளிக் கட்டடங்களுக்கு வர்ணப்பூச்சு 

by Staff Writer 04-03-2020 | 9:18 PM
Colombo (News 1st) கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட முன்பள்ளிக் கட்டடங்களுக்கு வர்ணம் பூசும் நடவடிக்கை இன்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. கன்சாய் எஸ்லோன் லங்கா நிறுவனம் மற்றும் மக்கள் சக்தி V-Force ஆகியன இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளன. ஆமர்வீதி நியூபசார் முன்பள்ளி, கிரான்ட்பாஸ் பராக்கிரம முன்பள்ளி மற்றும் மாளிகாவத்தை ஜூம்மா மஸ்ஜித் முன்பள்ளிக் கட்டடங்களுக்கு இன்று வர்ணம் பூசப்பட்டது. கொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட 7 முன்பள்ளிக் கட்டடங்களுக்கு நேற்று வர்ணம் பூசப்பட்டது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்காக இலவசமாக நடத்திச்செல்லப்படும் 7 முன்பள்ளி கட்டங்களுக்கு வர்ணம் பூசுவதற்கான திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு வெள்ளவத்தை பீட்டர்ஸன் முள்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதன்போது, மக்கள் சக்தி V-Force படையணியுடன் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கலைஞர்களும் இணைந்துகொண்டனர். கொழும்பு 3 - ஸ்டான்லி ஜேம்ஸ் முன்பள்ளி, கொழும்பு 2 - நைட்டா முன்பள்ளி, வணாத்தமுல்ல என்.எம்.பெரேரா முன்பள்ளி ஆகியவற்றுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் வர்ணம் பூசப்பட்டது.