பாட்டலி வௌிநாடு சென்று வர நீதிமன்றம் அனுமதி

பாட்டலி சம்பிக்க ரணவக்க வௌிநாடு சென்று வர நீதிமன்றம் அனுமதி

by Staff Writer 04-03-2020 | 4:09 PM
Colombo (News 1st) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வௌிநாடு சென்று வர நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 12 ஆம் திகதி வரை வௌிநாட்டுப் பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 10 இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இராஜகிரிய பகுதியில் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவரை பலத்த காயங்களுக்கு உள்ளாக்கியமை தொடர்பில் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வௌிநாட்டுப் பயணக் கோரிக்கைக்கு சட்ட மா அதிபர் திணைக்களம் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக பிணை நிபந்தனையுடன் அனுமதியை கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா டி நிரஞ்சனா வழங்கினார்.