நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பம்

நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பம்

by Staff Writer 04-03-2020 | 11:00 AM
Colombo (News 1st) மேல், வட மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று (04) அதிக வெப்பம் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இது குறித்து மக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது. 32 - 41 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதிக வெப்பநிலை காரணமாக தசைப்பிடிப்பு மற்றும் அதிக சோர்வு ஏற்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் அதிக நீரை பருகுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.