English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
04 Mar, 2020 | 5:14 pm
Colombo (News 1st) ஹெந்தலை தொழுநோய் வைத்தியசாலை முதலாவது தனிமைப்படுத்தும் மத்திய நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.
ஈரான், தென் கொரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்காக இந்த பிரிவு பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பான தேசிய செயற்றிட்டம் பாதுகாப்பு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹெந்தலை தொழுநோய் வைத்தியசாலை, தனிமைப்படுத்தி வைப்பதற்கான சிறந்த இடம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அணில் ஜாசிங்க குறிப்பிட்டார்.
இங்கு கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தங்கவைக்கப்படமாட்டார்கள் எனவும், கணகாணிப்பின் கீழ் இருக்க வேண்டியவர்கள் மாத்திரமே இங்கு அனுப்பப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.
தனிமைப்படுத்தப்படும் காலப்பகுதியில் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அணில் ஜாசிங்க சுட்டிக்காட்டினார்.
28 Mar, 2019 | 12:22 PM
22 Apr, 2021 | 03:43 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS