யாழ். நாகர்கோவிலில் 281 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு

by Staff Writer 03-03-2020 | 10:20 AM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - நாகர்கோவில் பகுதியில் 281 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா, கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. நாகர்கோவில் கடற்பிராந்தியத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, கடலில் மிதந்துகொண்டிருந்த கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக, கேரள கஞ்சா தொகை யாழ். போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்