by Staff Writer 03-03-2020 | 9:45 PM
Colombo (News 1st) மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நாளை (04) ஆரம்பமாகவுள்ளது.
2 போட்டிகளும் கண்டி பல்லேகெலே சர்வதேச மைதானத்தில் மின்னொளியில் நடைபெறவுள்ளன.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் 2 போட்டிகளைக் கொண்டதாகும்.
முதல் போட்டி நாளை இரவு 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
போட்டிக்கான இலங்கை குழாம் வீரர்கள் இன்று முற்பகல் பயிற்சிகளில் ஈடுபட்டனர்.
இதேவேளை, எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் பங்குபற்றும் இங்கிலாந்து குழாம் இன்று மாலை இலங்கையை வந்தடைந்தது.