பலசரக்கு ஏற்றுமதி செலவுகளை குறைக்க நடவடிக்கை

பலசரக்கு ஏற்றுமதி செலவுகளை குறைக்க நடவடிக்கை

by Staff Writer 03-03-2020 | 12:56 PM
Colombo (News 1st) பலசரக்கு வகைகளை ஏற்றுமதி செய்வதில் ஏற்படும் செலவுகளைக் குறைப்பதற்காக ஆய்வு நிலையம் ஒன்றை அமைக்க இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை நடவடிக்கை எடுத்துள்ளது. சர்வதேச நிதி நிறுவனங்களின் சுமார் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதிப்பங்களிப்புடன் இந்த ஆய்வு நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த ஆய்வுகூடம் அமைக்கப்பட்டதன் பின்னர் பலசரக்கு வகைகளை ஏற்றுமதி செய்வோர், எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் செலவுகளை குறைப்பதற்கு இயலுமான நிலை ஏற்படுமெனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.