by Staff Writer 03-03-2020 | 4:16 PM
Colombo (News 1st) தங்காலை - மித்தெனிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மரண வீடொன்றுக்கு குறித்த நபர் சென்றுகொண்டிருக்கையில் இன்று பகல் 1 மணியளவில் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
இரண்டு நபர்களால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
36 வயதான ஒருவரே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.