T20 போட்டியிலிருந்து நுவன் பிரதீப், தனஞ்சய நீக்கம்

இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்து நுவன் பிரதீப், தனஞ்சய டி சில்வா நீக்கம்

by Staff Writer 03-03-2020 | 1:25 PM
Colombo (News 1st) வேகப்பந்து வீச்சாளர்களான நுவன் பிரதீப் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஒரு நாள் தொடரின்போது இருவரும் உபாதைக்குள்ளானதால் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். தனஞ்சய டி சில்வாவுக்கு பதிலாக இருபதுக்கு 20 அணியில் இணைத்துக்கொள்ளப்படும் வீரர் இதுவரை பெயரிடப்படவில்லை. இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நுவன் பிரதீப்புக்கு 6 வார காலம் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனால் நுவன் பிரதீப்புக்கு பதிலாக அசித்த பெர்னாண்டோ, அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். 22 வயதான அசித்த 2017 ஆம் ஆண்டு ஸிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்ற போதிலும் அதன்பின்னர் அவர் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டி நாளை (04) பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.