யாழில் உருளைக்கிழங்கு அறுவடை விழா

யாழில் உருளைக்கிழங்கு அறுவடை விழா

by Staff Writer 02-03-2020 | 7:35 PM
Colombo (News 1st) யாழ். மாவட்டத்தின் சிறுப்பிட்டி, கோப்பாய் ஆகிய பிரதேசங்களில் உருளைக்கிழங்கு அறுவடை விழா இடம்பெற்றுள்ளது. உருளைக்கிழங்கு உற்பத்தியை விரிவுபடுத்தும் நோக்கில், விவசாய அமைச்சும் ஜனாதிபதி செயலகமும் இணைந்து விவசாயிகளுக்கு சுமார் 21 மில்லியன் உருளைக்கிழங்கு விதைகளைக் கடந்த வருடம் வழங்கியிருந்தது. அவற்றின் உற்பத்தியைப் பெறும் உருளைக்கிழங்கு அறுவடை விழா யாழ். மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.