ஹெரோயின் கடத்தலுடன் கைதி ஒருவருக்குத் தொடர்பு

ஹெரோயின் கடத்தலுடன் கைதி ஒருவருக்குத் தொடர்பு

by Staff Writer 01-03-2020 | 1:55 PM
Colombo (News 1st) காலி கடற்பிராந்தியத்தில் ஹெரோயின் கைப்பற்றப்பட்ட விவகாரத்துடன், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. துபாயில் வசிக்கும் ஒருவரும் இந்தக் கடத்தலுடன் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். துபாயில் வசிக்கும் சந்தேகநபரை கைது செய்வதற்கு சர்வதேச புலனாய்வுப்பிரிவினரின் ஒத்துழைப்பை பெறவுள்ளதாக போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். 118 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்றைய தினம் தம்பதியினர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். பிலியந்தல, தங்காலை மற்றும் திக்வெல்ல ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தனர். சந்தேநபர்கள் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.