இத்தாலியிலிருந்து வந்தோருக்கு கொரோனா பாதிப்பில்லை

இத்தாலியிலிருந்து நாட்டிற்கு வந்த இருவருக்கும் கொரோனா பாதிப்பில்லை

by Staff Writer 01-03-2020 | 12:02 PM
Colombo (News 1st) கொரோனாவில் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் தொற்றினால் பாதிக்கப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. இத்தாலியிலிருந்து வந்த இலங்கை பிரஜைகள் இருவரும் அங்கொட அங்கொட தொற்றுநோயியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். சளி உள்ளிட்ட நோய் அறிகுறிகளுடன், குறித்த இருவரும் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இவர்கள் இருவருடன் மேலும் இருவரும் அங்கொட தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.