ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலை மாணவர்கள் கைது

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலை மாணவர்கள் கைது

by Staff Writer 01-03-2020 | 10:15 AM
Colombo (News 1st) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 21 பேர் இன்று (01) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு தேரர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட்டமை மற்றும் வீதியை மறித்தமை உள்ளிட்டசில குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று புதுக்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.