குருணாகல் - சுந்தராபொல குப்பை மேட்டில் தீ பரவல்

குருணாகல் - சுந்தராபொல குப்பை மேட்டில் தீ பரவல்

by Staff Writer 29-02-2020 | 3:49 PM
Colombo (News 1st) குருணாகல் - சுந்தராபொல குப்பை மேட்டில் பரவிய தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர விமானப் படையினரின் உதவி கோரப்பட்டுள்ளது. தீயை அணைப்பதற்காக குருணாகல் நகர சபை மற்றும் இடர் முகாமைத்துவ நிலையம் என்பன இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் ஜானக ஹந்துன்பத்திரன தெரிவித்தார். நிலவும் வறட்சியுடனான காலநிலையால் தீயை அணைப்பது கடினமாக உள்ளதாக அவர் கூறினார். இது தொடர்பில் விமானப்படையின் ஊடகப்பேச்சாளர் க்ரூப் கெப்டன் துஷான் விஜேசிங்கவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. தேவைகளுக்கு ஏற்றாற்போல உதவிகளை வழங்க தமது குழுவினர் தயாராகவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சுந்தராபொல குப்பை மேட்டின் 7 ஏக்கர் பரப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. குப்பை மேட்டிற்கு அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கும் தீ பரவக்கூடிய சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.