கிளிநொச்சியில் டிப்பரில் கொண்டு செல்லப்பட்ட 320 கிலோகிராம் கேரளக்கஞ்சா பறிமுதல்

by Staff Writer 29-02-2020 | 7:11 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - வேரவில் பகுதியில் 320 கிலோகிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று அதிகாலை 4 மணிக்கு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. டிப்பர் ஒன்றில் கேரளக் கஞ்சாவை கொண்டு சென்ற சந்தேகநபரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா - பண்டாரிக்குளத்தைச் சேர்ந்த 46 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் ஜயபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.