ஆனையிறவு உப்பளத்தை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

ஆனையிறவு உப்பளத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

by Staff Writer 29-02-2020 | 4:14 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - ஆனையிறவு உப்பளத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கைத்தொழில் அமைச்சினால் இதற்கான பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த செயற்பாட்டிற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்த போதிலும், அவைவெற்றியளிக்கவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய, புதிய அமைச்சரவை அனுமதியுடன் ஆனையிறவு உப்பளத்தை மீள ஆரம்பிக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அரச - தனியார் பங்குடைமையுடன் இந்த உப்பளம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.