25 மாணவர்களுக்கு 2 வருடங்களுக்கு வகுப்புத்தடை

களனி பல்கலைக்கழக CCTV கெமராக்கள் சேதம்: 25 மாணவர்களுக்கு 2 வருடங்களுக்கு வகுப்புத்தடை

by Staff Writer 28-02-2020 | 3:49 PM
Colombo (News 1st) களனி பல்கலைக்கழகத்தில் CCTV கெமரா கட்டமைப்பை சேதப்படுத்தியமைக்காக 25 மாணவர்களுக்கு 2 வருடங்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. சேதப்படுத்தப்பட்டுள்ள CCTV கெமராக்களை மீள பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 2017/2018 ஆம் கல்வி ஆண்டு நாளையுடன் நிறைவடைவதால் நாளை காலை 8 மணியின் பின்னர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனைத்து மாணவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நாளை காலை 8 மணிக்கு முன்னர் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து வௌியேற வேண்டும் என மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, களனி பல்கலைக்கழகத்தில் CCTV கெமரா கட்டமைப்பை சேதப்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்களில் நால்வர் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.