ஜெர்மனிக்கு ஆட்களை கடத்தும் பிரதான சந்தேகநபர் கைது

ஜெர்மனிக்கு ஆட்களைக் கடத்தும் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட இருவர் கைது

by Staff Writer 27-02-2020 | 5:44 PM
Colombo (News 1st) ஜெர்மனிக்கு ஆட்கடத்தலை மேற்கொள்ளும் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆட்கடத்தலில் ஈடுபடும் பிரதான சந்தேகநபரால் இலங்கையூடாக ஜெர்மனிக்கு அழைத்துச் செல்லப்படவிருந்த பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த 31 வயதான ஒருவரே கைது செய்யப்பட்ட மற்றைய நபராவார். சந்தேகநபர்கள் இருவரும் துபாயிலிருந்து வருகை தந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் மற்றுமொரு விமானத்திற்காக காத்திருந்த போதே குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு 5000 டொலர் பணத்தை வழங்குவதற்கு சந்தேகநபர்கள் முயற்சித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள பாலஸ்தீன பிரஜையிடம் இருந்த போலி கடவுச்சீட்டு கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.