சாட்சியாளர்களை அச்சுறுத்தியமையால் சஜின் டி வாஸூக்கு விளக்கமறியல்

by Staff Writer 27-02-2020 | 8:03 PM
Colombo (News 1st) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று உத்தரவிட்டார். பிரதிவாதியான சஜின் டி வாஸ் குணவர்தன சாட்சியாளருக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான அரச சிரேஷ்ட சட்டத்தரணி உதார கருணாதிலக்க நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட 5 வருடங்களில் 30 கோடி ரூபாவிற்கும் அதிக நிதியை திரட்டியமையூடாக நிதித்தூய்தாக்கலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சுமத்தி சட்ட மா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.