ஆசிரியர் - அதிபர்கள் இன்று முதல் சட்டப்படி வேலை

ஆசிரியர் - அதிபர்கள் இன்று முதல் சட்டப்படி வேலை

by Staff Writer 27-02-2020 | 8:02 AM
Colombo (News 1st) ஆசிரியர் - அதிபர்கள் தொழிற்சங்கங்கள் இன்று (27) முதல் சட்டப்படி வேலை செய்வதற்குத் தீர்மானித்துள்ளன. ஆசிரியர் சேவையை, தொழில்முறை சேவையாக மாற்றுதல், இடைக்கால சம்பள சுற்றறிக்கை வழங்குதல், கல்விக்கு 6 சதவீத ஒதுக்கீடு, பாடசாலை பராமரிப்புக்காக பெற்றோரிடமிருந்து பணம் சேகரிப்பதைத் தவிர்த்தல், 2016 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதிக்கு பின்னர் சேவையில் இணைந்த ஆசிரியர்களுக்கு முழு ஓய்வூதியம் வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, ஆசிரியர் - அதிபர்கள் தொழிற்சங்கத்தினர், நேற்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால், நாடளாவிய ரீதியில் பாடசாலை கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.