by Staff Writer 27-02-2020 | 11:11 AM
Colombo (News 1st) கிரேக்கத்தின் - லெஸ்போஸ் தீவகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
புதிய அகதி முகாம்களைக் நிர்மாணிக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், இரண்டாவது நாளாக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டங்களின்போது பொலிஸ் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், கிரேக்க பிரதமர் Kyriakos Mitsotakis ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதான பேச்சுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.