உதயங்க வீரதுங்கவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

உதயங்க வீரதுங்கவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு; 11 ஆம் திகதி வரை விளக்கமறியல்

by Staff Writer 26-02-2020 | 6:19 PM
Colombo (News 1st) ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப் படைக்கு உக்ரைனிலிருந்து மிக் ரக விமானங்களைக் கொள்வனவு செய்த போது, முறையற்ற வகையில் தலையீடு செய்து, கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இந்நிலையில், உதயங்க வீரதுங்கவின் பிணை கோரிக்கையை நிராகரித்த கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க, அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.