ஆசிரியர், அதிபர்கள் இன்று தொழிற்சங்க நடவடிக்கை

ஆசிரியர், அதிபர்கள் இன்று தொழிற்சங்க நடவடிக்கை

by Staff Writer 26-02-2020 | 6:54 AM
Colombo (News 1st) இடைக்கால கொடுப்பனவை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி சுகயீன விடுமுறையின் கீழ், இன்று (26) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன. 30 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இவர்களின் கோரிக்கை தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர், M.H.M. சித்ரா நந்தவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, தொழிற்சங்கத்தினரின் கோரிக்கை தொடர்பில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் பரிசீலிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.