காத்தான்குடியில் 9 வயது மகனுக்கு மின்னழுத்தியால் சூடு வைத்த தாய் கைது

காத்தான்குடியில் 9 வயது மகனுக்கு மின்னழுத்தியால் சூடு வைத்த தாய் கைது

எழுத்தாளர் Staff Writer

26 Feb, 2020 | 3:47 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு – காத்தான்குடி, இரண்டாம் குறிச்சியில் 9 வயது மகனை மின்னழுத்தியால் சூடு வைத்து காயப்படுத்திய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

வைத்தியசாலை பொலிஸாரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய இன்று முற்பகல் இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் (27) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த தாயை ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீக்காயங்களுக்குள்ளான சிறுவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தாயுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பின்னர், மின்னழுத்தியை சூடாக்கி மகனை காயப்படுத்தியுள்ளமை விசாரணைகளினூடாக தெரியவந்துள்ளது.

கடந்த 22 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள போதிலும், நேற்றைய தினமே பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்