மின்வெட்டு தொடர்பான ஆய்வறிக்கை கையளிக்கப்படவுள்ளது

முன்னறிவித்தலின்றி மின்வெட்டு: ஆய்வறிக்கை கையளிக்கப்படவுள்ளது

by Staff Writer 25-02-2020 | 3:24 PM
Colombo (News 1st) முன்னறிவித்தல் இன்றி நாடளாவிய ரீதியில் இரண்டரை மணித்தியாலங்கள் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை மின்சக்தி அமைச்சின் செயலாளரிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் அதனை மின்சக்தி அமைச்சரான மஹிந்த அமரவீரவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டார். கடந்த 3 ஆம் திகதி நாட்டின் பல பகுதிகளில் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது. அவசர திருத்தப் பணிகள் காரணமாகவே மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை அறிவித்தது. எனினும், இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்வதற்கு மின்சக்தி இராஜாங்க அமைச்சரின் தலைமையில் நிபுணர் குழுவொன்றி நியமிக்கப்பட்டது. இந்த குழுவின் விசாரணை அறிக்கை இன்று அமைச்சிற்கு கிடைத்த பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன கூறினார்.

ஏனைய செய்திகள்